கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிக்கும் அகத்தியர்

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒத்தத்தெருவில் அகத்தியருக்கு தனிக் கோயில் உள்ளது. அகத்தியரோடு அவருடைய மனைவி லோபா முத்திரையும் இணைந்து அருள் பாலிக்கின்றனர். மூலவர் கருங்கல் விக்ரஹமாக நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார்.
அகத்தியர்தான் காவிரியை மீட்டுத் தந்ததாக வரலாறு. சித்த வைத்தியத்திற்கும் இவரே தலைவர். அகத்தியரை வழிபட்டால் தீராத நோயும் தீரும். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலிலுள்ள அகத்தியர், கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிப்பது சிறப்பு. உற்ஸவ மூர்த்தியும் இக்கோவிலில் உள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அகத்தியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அந்த நீரைப் பருகுபவர்களுக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை. வியாழன் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த அபிஷேங்கள் நடக்கின்றன.
இக்கோவிலை பற்றி மேலும் தகவல்கள் அறிய விரும்பினால் 94428 88281 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒத்தத்தெருவில் அகத்தியருக்கு தனிக் கோயில் உள்ளது. அகத்தியரோடு அவருடைய மனைவி லோபா முத்திரையும் இணைந்து அருள் பாலிக்கின்றனர். மூலவர் கருங்கல் விக்ரஹமாக நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார்.
அகத்தியர்தான் காவிரியை மீட்டுத் தந்ததாக வரலாறு. சித்த வைத்தியத்திற்கும் இவரே தலைவர். அகத்தியரை வழிபட்டால் தீராத நோயும் தீரும். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலிலுள்ள அகத்தியர், கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிப்பது சிறப்பு. உற்ஸவ மூர்த்தியும் இக்கோவிலில் உள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அகத்தியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அந்த நீரைப் பருகுபவர்களுக்கு நோய் தீரும் என்பது நம்பிக்கை. வியாழன் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த அபிஷேங்கள் நடக்கின்றன.
இக்கோவிலை பற்றி மேலும் தகவல்கள் அறிய விரும்பினால் 94428 88281 என்ற தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment