நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 18 September 2014

செல்வம் அள்ளித்தரும் கனகதாரா வழிபாடு


கனகதாரா என்றால் பொன், மழை என்று அர்த்தம். பொன், மழைக்கு காரணமாக அமைந்ததால் இந்த ஸ்தோத்திரத்திற்கு கனகதாரா ஸ்தோத்திரம் எனப் பெயர் ஏற்பட்டது. பொன்மழை எப்படி பெய்தது? ஸ்ரீஆதி சங்கர பகவத் பாதான் பிரம்மச்சாரியாக இருந்தபடியால் அந்த ஆசிரம நியமப்படி தினந்தோறும் பிச்சை எடுத்தே உண்டு வந்தார்.
ஒரு நாள் துவாதசி நாள் அன்றும் வழக்கமாக பிச்சை எடுக்கச் சென்றார். அவர் எடுக்கச் சென்ற இடம் ஓர் ஏழைப் பிராமணர் வீடு. அந்த வீட்டில் அவர் மனைவி மட்டும் இருந்தார். ஸ்ரீசங்கரர் அவர் வீட்டு வாசலில் வந்து நின்றார். ஆனால் அப்பொழுது பிச்சையிட அந்தப் பெண்மணியிடம் எதுவும் இல்லை.
பிச்சைக்கு வந்த அவரைப் பார்த்த பிராமண பெண் முகம் மிகவும் கவலையுடன் காணப்பட்டது. அவருக்காக ஒரு நெல்லிக்காய் மட்டுமே அவ்வீட்டில் இருந்தது. இந்த உத்தம மகானுக்கு வேண்டிய பிச்சையை அளிக்க நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்ற அப் பெண் சிந்தனை செய்து அதனை ஸ்ரீசங்கரருக்கு கொடுத்தார்.
அப்பெண்மணியின் பேரன்பையும் அதே சமயத்தில் அவர்களுடைய வறிய நிலையையும் பார்த்து மனமிரங்க, அவர்கள் மேல் அருள் உண்டாயிற்று. அப்பொழுதே `கனகதாராஸ்தவம்' என்று ஸ்தோத்திரத்தினால் அவர்களுக்கு நிறைய ஐஸ்வர்யம் அருள வேண்டும் என்று ஸ்ரீமகாலஷ்மியைப் பிரார்த்தித்தார். அப்போது இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனே இந்த வறுமை.
அதனால் இவ்வறுமை மாறாது...
என்று ஓர் அசரீரி வாக்கு ஒளித்தது. அதனைக் கேட்ட ஸ்ரீசங்கரர், தற்போது, தங்கள் வீட்டில் இறுதியாக இருந்த ஒரு நெல்லிக்காயினைக் கூட வைத்து கொள்ளாமல் தந்ததால் மிகுதியான புண்ணியம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.
இதனால் அவர்கள் பாவங்கள்யாவும் சூரியனை கண்ட பனிபோல் மறைந்து விடும் என்றார். உடனே அவ்வீட்டில் பொன்மழை பெய்யத் தொடங்கியது. சகல ஐஸ்வர்யங்களும் அவர்களுக்கு கிடைத்தது. இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ஸ்ரீமகாலஷ்மியின் திருவருள் கூடி வரும். இப்படிப் பலர் பல பெரியோர்கள் செல்வ நிலை பெற்று செழிப்பாக வாழ்கிறார்கள் என்கிறார் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரெங்கராஜன்.

பூஜை செய்வது எப்படி?
கனகதாராவை கிழக்கு முகமாக வைத்து தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து 47-வது நாள் 
(1 மண்டலம்) வரை தொடர்ந்து நெய் விளக்கை ஏற்றி வைத்து 48-வது நாள் அன்று மட்டும் 21 நெய் விளக்கை ஏற்றி வைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
மண்டலத்தின் (48-வது நாள்) நிறைவு நாள் அன்று கனகதாரா அலங்கரித்த மண்டலத்தில் வைக்கப்பட வேண்டும். அன்றைய தினம் 21 சுமங்கலிகளுக்கு அறுசுவை உணவு, வெற்றிலை பாக்கு, தாம்பூலம் வழங்க வேண்டும். குறிப்பாக நீலம் மற்றும் சிவப்பு ஆகிய ஜாக்கெட் துணிகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுப்பதினால் அவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.

No comments:

Post a Comment