நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 10 September 2014

இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள்

"அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "





அனைவருக்கும் என் வணக்கத்தை 
தெரிவித்துகொள்கிறேன்  
இதில் பதிவு செய்யப்படுகிற ஆன்மீகம் தகவல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து பயன்பட வேண்டும் அவர்களும் தங்கள் வாழ்க்கையில்  உள்ள துன்பத்திலிருந்து  விடுபட்டு   ஆனந்தமாய் வாழ வேண்டும்  என்று  நல்ல என்னத்தில் தான். நான் பதிவு செய்கிறேன் 
என்னுடைய பிளாக்கில் இருக்கிற அம்பாள்  
ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த கோயில் மானாமதுரை உள்ளது . நான் இந்த அம்மாளின் பக்த்தன் அதனால் இந்த அம்மாள் படத்தை  என்னுடைய  பிளாக்கில் வைத்து உள்ளேன இந்த அம்மாள் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு . 
ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை 
அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம் .
அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 
என்றும் அன்புடன்
N .செந்தில் குமார் 
நெல்லை  

1 comment: