நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 30 September 2014

கால சர்ப்ப தோஷத்திர்க்கு சிறந்த பரிகாரம்

கால சர்ப்ப தோஷத்திர்க்கு சிறந்த பரிகாரம்

ஒரு ஜாதகத்தில் ராகு & கேது இருக்கும் இடங்களுக்குள் உள்ள ஏழு ராசிகளுக்குள் மற்ற ஏழு கிரகங்களும் இருந்து மீதி ஐந்து ராசிகள் காலியாக இருக்கும் நிலைதான் கால சர்ப்ப தோஷம் ஆகும்! இது 32 வயது வரை மிக வீரியமாகவும் பின்பு சிறிது மட்டுப்பட்டும் இருக்கும். அனுபவித்தவர்களுக்கு அனுபவிப்பவர்களுக்கு தான் தெரியும் இந்த தோஷத்தின் கொடுமை !

இங்கே கொடுக்ககப்படுபவை மிகவும் சக்தி வாய்ந்த அதே சமயம் செலவில்லாத எளிய பரிகாரங்கள். முயன்று பாருங்கள்.

(1) தினமும் இரும்பால் செய்த பாத்திரத்தில் சிறிது பாலுடன் சேர்த்த தண்ணீரை அரச மரத்திற்க்கு விட்டு வழிபட்டு வர வேண்டும்.

(2) தினசரி மஹா மிருத்யுஞ்சய மந்திர பாராயணம் மிகுந்த பலன் கொடுக்கும்

(3) அமாவாசை அன்று மூன்று தேங்காய்களையும் சிறிதளவு நிலக்கரி துண்டுகளையும் எடுத்து கொண்டு ஓடும் நதி அல்லது நீர் நிலைகளில் ஒன்றன் பின் ஒன்றாக தேங்காயை எறிந்து பின்பு கரித்துண்டுகளையும் எறிந்து திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும். பின்பு குளிக்கலாம். இது தோஷத்தின் கடுமையை குறைக்கும்.
--நன்றி ஸ்ரீ விஸ்வ ஆன்மிகம்  

No comments:

Post a Comment