நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 26 May 2014

சிறுவர்களுக்கான விரதங்கள்!



மகாகவி காளிதாஸர், சரீரம் ஆத்யம் கலு தர்மஸாதனம் (நல்ல காரியங்கள் செய்வதற்கு அடிப்படையான தேவை என்பது நல்ல உடல்நலமே) என்று, நமது உடல்நலத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகிறார். ஆதலின், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதுக்குத் தகுந்தாற்போல விரதங்களைக் கடைப்பிடிக்கலாம்.
விரதம் எனில் கட்டுப்பாடு. ஆதலின் குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவர்களுக்கு இயன்றாற்போல் விரதங்களைப் பழக்கினோமானால், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, வாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இனிமையாக வாழ்வார்கள். பொதுவாக. எட்டு வயது முதற்கொண்டு எண்பது வயது வரையில் விரதங்களை மேற்கொள்ளலாம். எனினும், அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு விரதங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன. விரதங்கள் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலனுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தற்கால சமுதாயத்தில், பல விதங்களில் மனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் நிலவி வருவதால், சிறுவர் - சிறுமியர்களுக்கு விரதங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடைப்பிடிக்க வைப்பது நலமே

No comments:

Post a Comment