நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 4 May 2014

* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே வெற்றி பெறுவதற்கான பரம ரகசியம்.
* தன்னம்பிக்கை கொண்ட ஒருசிலரின் வாழ்க்கை வரலாறே உலக சரித்திரமாக விளங்குகிறது. 
* பாவம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் அது, "நான் பலவீனமானவன்; மற்றவர்கள் பலவீனமானவர்கள்' என்று சொல்வது ஒன்று தான்.
* சுதந்திரமானவர்களாக வாழுங்கள். எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். 
* "இல்லை' என்றோ, "என்னால் இயலாது' என்றோ ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
* தோல்வியைப் பொருட்படுத்தாதீர்கள். ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சியில் இறங்குங்கள்.
* சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் விரும்பி சேர்கிறாள். கடந்து வந்த பாதையைப் பின்னால் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. ஊக்கத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்.

- விவேகானந்தர்

No comments:

Post a Comment