“அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கீலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு”
சித்தர்களை தரிசிக்க தியானம் சொல்கிறேன் கேள் என சொல்கிறார் அகத்தியர்.....
“ஓம் கிலீம் சிவாய நம”
இந்த மந்திரத்தை ஜெபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களை காணலாம்..அப்படி அவர்கள் தோன்றும் போது பரிகசிக்கதக்க உருவத்தில்
தோன்றுவார்கள் என்றும்.அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று சொல்கிறார்...சிட்டர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் என கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.
ஆதி சித்தன்.

No comments:
Post a Comment