நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 20 April 2014

ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது ஏன்?


ஆலயத்துள் நுழையும் போது கோபுரப் படிகளை தொட்டு வணங்குவது ஏன்?
ஆலயம் என்பது நாமறியாமலே பல ஞானிகளும் பெரியவர்களும் கூடும் இடம்...
ஆலயத்துள் ஆண்டவன் ஒருவனே பெரியவன...், அங்கே வேறெவரையும் வணங்கக் கூடாது என்பதற்காக, இறைதரிசனத்துக்கு முன்பே, அங்கு காலடி பதித்த அத்தகைய பெரியவர்களின் திருப்பாதங்களுக்கு நம் வணக்கத்தைச் செலுத்துமுகமாக ஆலயப்படியை தொட்டு வணங்குகிறோம்.
ஆலயங்களுக்கு ஏழை, எளியவரும் வருவதுண்டு. நம் ஆணவத்தையும் பகட்டையும், வீண்பெருமையையும் அங்கேயே விட்டுவிட்டு, இறையடியார்களான அவர்களுக்கும் வணக்கம் தெரிவித்துவிடுவதாகவும் ஆகிறது.

No comments:

Post a Comment