நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 24 April 2014

ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த இலை உண்டு

.

சிவபெருமான் தீக்குள் நின்று ருத்ரதாண்டவம் ஆடும் சிவனுக்கு குளிர்ச்சி தரும் “ வில்வம் “ இதன் வேர் பட்டை இலை காய் பூ எல்லாமே மருத்துவ குணம் கொண்டது.

மஹா விஷ்ணு கடலில் குளிர்ச்சியாகக் குடி இருக்கும் விஷ்ணுவிற்கு வெப்பம் தரும் இதன் மகத்துவம் சொல்ல முடியாதது இதன் காற்றுப்பட்டாலே பாவங்கள் நீங்கும். “துளசி” இருக்குமிடத்தில் விஷப்பூச்சிகள் அண்டாது. பல நோய்களைத் தீர்க்கும் சக்தி உடையது துளசி.

அம்பாள் அம்பிகைக்கு உகந்தது “ வேப்பிலை”. இது ஓர் அற்புதமான மூலிகை இலை. தொற்று நோய்க் கிருமிகளைத் தடுக்கும். ஆற்றல் பொருந்தியது. அம்மை நோயைத் தடுக்கும். காயத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்களை நீக்கும் தன்மை உடையது.

வினாயகர் வினாயகப்பெருமானுக்கு “அருகம்புல்” இதுவும் நிறைய மருத்துவ குணங்கள் உடையது. அருகம்புல் சாறு பல நோய்களை குணப்படுத்தக்கூடியது.

மாவிலை பூஜை முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் கும்பத்திற்கு மாவிலை சுற்றுவார்கள். நல்ல காரியங்கள் நடக்கும் பொழுது வீட்டில் மாவிலை தோரணம் கட்டுவார்கள். ஆண்டிசெப்டிக்காக உபயோகப்படும் துர்தேவதைகள் துர் நாற்றம் நோய்த் தொற்று வராமல் காப்பாற்றும். பல நாட்கள் வாடாமல் ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது.

இவற்றைத் தவிரவும் தவளம் மாசிபத்திரி மருக் கொழுந்து மரு போன்ற மணம் வீசும் இலைகளூம் பூஜைக்கு உகந்தவை. இத்தகைய மருத்துவ குணங்கள் நிரம்பிய இலைகளால் பகவானை பூஜித்து அதை பிரசாதமாக நாமும் அருந்தினால் ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

No comments:

Post a Comment