நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 23 April 2014

வழிபாட்டில் உயர்ந்தது எது!

வழிபாட்டில் உயர்ந்தது எது!

* உண்ணாமல் இருக்கலாம், உறங்காமல் இருக்கலாம்; ஆனால் கடவுள் சிந்தனை இல்லாமல் இருக்கக்கூடாது.
* கடவுள் இல்லை என்பவனுக்கு அனைத்தும் இல்லாமல் போய்விடும். கடவுள் உண்டு என்பவனுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
* அறிவையும், அன்பையும் கெடுக்கக்கூடிய ஆகாரத்தை சாப்பிடுவதை விட, தூய உணவை சாப்பிட்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* உலகம் நிலையற்றது, தர்மம் நிலையானது. தர்மத்தால் தான் நற்கதியடைய முடியும். தர்மம் இறைவனுடைய மூத்த மகன்.
* இறைவனுடைய கருணையைப் பெறத்துடிக்கும், ஒவ்வொருவரும் பிற உயிர்களிடம் கருணை காட்ட வேண்டும்.
* உடம்பும் நாமும் வேறு, வேறு. ஆனால் சிவமும் சக்தியும் அப்படியல்ல. மலரும் மணமும் போன்று இணைந்திருப்பது.
* இறைவனுக்கு செய்யும் வழிபாட்டை விட, ஏழைகளுக்குச் செய்யும் வழிபாடே உயர்ந்தது.
- வாரியார்

No comments:

Post a Comment