நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 25 April 2014

இறைவன் பேரறிவாளன் ஆக இருக்கிறான்

தவறாமல் முழுவதும் படிக்கவும் இறைவன் பேரறிவாளன் ஆக இருக்கிறான்... எதை ஒன்றை அறிந்தால் எல்லாம் அறியமுடியுமோ அந்த ஒன்றை மட்டுமே அறிந்தவனாக இருக்கிறான்...அந்த ஒன்றை தவிர வேறு எதையும் அறிய முயலவே முயலுவதில்லை...முயலவும் கூடாது.... பேரறிவை நாம் புரிந்து கொண்டாலே இறைவனை புரியவும் உணரவும் முடியும்...இறைவன் எம்மயமாக இருக்கிறானே,அம்மயமாக மாற்றிகொள்ள நமக்கு மிகவும் எளிது..
பேரறிவு என்பது என்ன? அது சகலமும் அறிந்த அகண்ட விரிந்த அறிவு அல்ல...அல்லவே அல்ல...பலதரப்பட்ட அறிவுகள் என்ற பன்மை நிலையும் அல்ல....அல்லவே அல்ல....பேரறிவு என்பது அந்த ஒன்றை மட்டுமே என்றும் விலகாது பற்றிக்கொண்டு இருக்கும் பெரிய பெரிதினும் பெரிய,ஆழமான, ஆழத்திலும் ஆழமான ஓர் அறிவு,,, ஒரே அறிவு...ஆகவே அந்த ஒன்றை தவிர வேறு ஒரு அறிவு உடன் இல்லாததால் அந்த ஓர் அறிவை தூய அறிவு என்றே சொல்ல வேண்டும்......இறைவனின் தூய அறிவில் எது ஒன்று கலவாத ஒன்றினில் ஒன்றாய் தூய்மை நிலையில் உள்ளது....அந்த பேரறிவின் தூய்மையை நாம் அறிவதின் மூலமே இறைவன் அறிந்த அந்த ஒன்றையும் நாம் அறிய முடியும்....அந்த ஒன்றின் மூலம் அனைத்தையும் அறிய முடியும்....அந்த ஒன்றை அறிந்தவனே ஞானி என்று சொல்லுகிறோம்.... எல்லாம் அறிந்தவன் ஞானி....எல்லா அசுத்த அறிவுகளை மறந்து தூய்மை அடைந்து அந்த பேரறிவை மட்டுமே பற்றிக் கொண்டதால் அந்த பேரறிவின் மூலம் எல்லாம் அறிந்த ஞானி ஆகிறான்.....அந்த ஒன்று அடுத்து வரும்.

No comments:

Post a Comment