சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.
1.சித்தர் தரிசன மந்திரம்:-
ஓம் || கிலி ரங் அங் சிங் ||
இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் ,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள்மற்றும்யோக, ஞான ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
2.சித்தர் தரிசன மந்திரம்:-
சிவயநம கிலி ஓம்|||
இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாத,வைத்தியம்), யோக ஞான ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
3.சித்தர் தரிசன மந்திரம்:-
ஓம்|சிங் ரங் அங் சிங்|
இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகி நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .
மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதை தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.
No comments:
Post a Comment