ஏகாங்க நமஸ்காரம்:–
தலையை மட்டும் குனிந்து வணங்கும் முறை. அதாவது தலையாகிய ஒரு உடல் உறுப்பினைக் கொண்டு வணங்குதல் எனப் பொருள்படும்.
திரியங்க நமஸ்காரம்:–
மூன்று உடல் உறுப்புகளைக் கொண்டு வணங்கும் முறைக்கு இந்தப் பெயர். இந்த வணக்க முறையில் தலைக்கு மேலாக இரு கரங்களையும் கூப்பி வணங்குவார்கள்.
பஞ்சாங்க நமஸ்காரம்:–
உடலில் உள்ள ஐந்து உறுப்புகளைக் கொண்டு வணங்கும் முறைக்கு, அதாவது பஞ்ச அங்கங்களால் வணங்கும் முறைக்கு பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர். கை இரண்டு, முழந்தாள் இரண்டு, சிரம் ஆகிய ஐந்தும் நிலத்தில் பொருந்த வணங்குதல். இது பெண்கள் வணங்கும் முறையாகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:–
எட்டு அங்கங்களைக் கொண்டு வணங்குதல். தலை, கை இரண்டு, இரு செவிகள், இரு முழந்தாள்கள், மார்பு ஆகிய எட்டு உடல் உறுப்புகள் தரையில் பட வணங்கும் முறை இதுவாகும்.
சாஷ்டாங்க நமஸ்காரம்:–
நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வணங்குவது. இதை தண்டனிடுதல் என்று கூறுவார்கள். அதாவது ஒரு கோல் (தண்டம்) ஆதாரமற்று விழுவதைப் போல இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு அவனைச் சரணடைதல் ஆகும். இது ஆண்கள் வணங்கும் வழிபாட்டு முறையாகும்.

No comments:
Post a Comment