நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 20 August 2014

நாகவழிபாடு

நாகவழிபாடு



சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு .............
இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் 
பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. 
சிந்துசமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது. 
விவசாயிகள், ஆடியில் தங்கள் பணிகளைத் தொடங்குவது வழக்கம். 
அவர்களுக்கு பாம்பு மற்றும் பூச்சிகளால் 
இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு இறைவழிபாடு செய்தனர். 
சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு கழுத்திலும், 
இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர். 
இன்னும் ஒரு படிமேலாக, பாம்புக்கே மூலஸ்தானம் அமைத்து, 
நாகராஜர் கோயில்களையும், புற்றுக்கோயில்களையும் உருவாக்கினர். 
பாம்புக்குரிய தினமாக நாகசதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. 
இந்த விரதம் அனுஷ்டிப்பது குறித்து கதை ஒன்றும் உள்ளது. 
அரசன் ஒருவனின் பிள்ளைகளான ஏழுபேர் ஒரே சமயத்தில் 
நாகம் தீண்டி இறந்தனர். அவர்களோடு பிறந்த தங்கை 
ஒருத்தி மட்டும் இருந்தாள். விரதமிருந்து. பாம்பிருந்த புற்று 
மண்ணை நீரில் கரைத்து, இறந்த சகோதரர்களின் உடலில் பூசினாள். 
அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். 
அந்த நாளே நாகசதுர்த்தி என்பர். 
இந்த விரதத்தை ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் 
கடைபிடிப்பது வழக்கம்.இந்த ஆடியில் வருகிறது. 
இந்நாளில், அரசமரத்தடியில் உள்ள ஒன்பது நாகர்களான 
அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரிஅப்ஜன், கங்குபாலன், 
கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் நாக விக்ரஹங்களுக்கு பால் 
அபிஷேகம் செய்வர். புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வர். 
இந்த விரதத்தால் நாகதோஷம், புத்திர தோஷம் நீங்கும். 
ராகுகேதுவால் உண்டாகும் திருமணத்தடை அகலும். 
நாகசதுர்த்தியன்று அரசமரத்தடியில் 
பாம்புக்கல்லை பிரதிஷ்டை செய்வது சிறப்பு.

No comments:

Post a Comment