நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 30 August 2014

சித்தர்கள்







# சித்தர் - சித்தியை கைவர பெற்றவர்கள்
# 3 சித்தி - கர்ம சித்தி, யோகா சித்தி, ஞான சித்தி
# அசுத்த பூத அணுக்களை நீக்கி சுத்த பூத அணுகலால் தன் தேகத்தை மாற்றி அமைத்து
சுத்த தேகம்/பிரணவ தேகம் பெற்றனர்.
# சாககலை - சித்தர்கள் தங்கள் தேகத்தை ஞான தேகமாய் வேதியல் செய்து வெட்ட
வெளியில் மறைத்து விட்டார்கள்
# இவர்கள் சாதனை செய்தது சன்மார்க்கம்
# அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை.
# பதி - சிவமாகிய இறைவன்
# பசு - ஆன்மாகிய தான்
# பாசம் -உலக தொடர்புகள் என்னும் மாயை
# சாக கல்வி
# தேகம்- உடல் தேகி ஆன்மா
# ஆன்மாவின் கருவி உடல்.
# கரணங்கள் (சேனை) நான்கு. அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
# ஆன்மாவுக்கு இச்சை பட ஒரு மனம் வாய்த்திருகிறது, மனதின் இச்சையாகிய நமக்கு தேவை தான் என்று ஆமோதித்து நிச்சயா படுத்த புத்தி முன் வருகிறது.


தேகம் - உடல் தேகி - ஆன்மா
கரணம் - மனம் புத்தி அகங்காரம் சித்தம்

மெய்ப்பொருள் - எங்கும் எக்காலத்திலும் பரி பூரணமாக நீக்கமற நிறைந்து நிற்கும் ஒளிபொருள் எதனாலும் மாறுபாடு அடையாது. மெய் என்றால் என்றும் அழிவற்று உள்ள பொருள்.


அண்டம் - உலகம்
பிண்டம் - உடல்

வெளியே உள்ள பஞ்ச பூத இயற்கையின் ஆற்றல் தூல தேகம், அதற்குள் சூட்சம தேகமகாவும் , எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருப்பதை கண்டு பிடித்தான் சித்தன்.

ஐந்து பூதம் -
நிலம் - உடல்
நீர் - உதிரம்
தீ - சூடு
காற்று - இயக்கம்
ஆகாயம் -நினைப்பு மறைப்பு


தூல உடம்பு வேதியல் செய்து ஆன்ம ருபமாக்கி சாகத நிலை எய்தி
ஆனந்த கூத்து ஆடினர்.


செம்பிலும் கல்லிலும் கடவுளின் குறியீடுகள் ஆக்கி வழிபட்டு வந்த நிலை மாறி இறைவன் உள்ளும் புறமும் எங்கும் பரிபூரணமாக நீக்கமற நிறைந்து நின்று உலகத்தை நியதிபடுத்தி நடத்தும் அந்த பரிபூர்ணனான இறைவனை கண்டான்

குரு - அவர்களது தத்துவம் இலைமறை காயாக இருப்பதால் குரு காட்டினால் அன்றி காண முடியாத மறைப்பாக உள்ளது.

உருவம் அருவம் அருவாரூபம்


கல்வியின் பயன் தன்னை அறிய கற்பதுவும் , இறைவன் திருவடி அடைய கற்பது தான்.
இறைவ னது திருவடியை காட்டும் உயிர்கள் தேட தொடங்கி விட்டால்
போதும் தன்னை தேடுபவர்களை நோக்கி இறைவன் தன் கூட்டத்தை காட்டி
கொடுத்து அருளாளர் கூட்டத்தில் சேர்த்து விடுவான்.

தம் உடம்பை தவசாலை ஆக்கி, புலன்களை ஞான அக்னியில் வேள்வியாக்கி மனித மனதை உருக்கி அதை உருக்குலைய செய்து ஞான ஒளி பெற்று விடுகிறான்.

இவர்கள் நோக்கம் பிறவி நோய் , மன நோய் உடல் நோய் இம் மூன்று நோய்களால் அழுந்திஅறியாமை இருளில் கிடந்துழலும் மக்களை விழிக்க செய்வது

No comments:

Post a Comment