நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 24 August 2014

அமாவாசை யாகம் நாளை 25.08.2014 திங்கள் கிழமை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அமாவாசை யாகம் நாளை 25.08.2014 திங்கள் கிழமை 




























மானாமதுரை ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்  
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள்  துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் திங்கள்கிழமை 
25-08-2014அன்று   நடைபெறுகிறது  அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு     உண்டு என்பதால் அன்றைய தினம்  இந்த யாகத்தை தஞ்சை குருஜி 
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள்  மற்றும்அவர்கள்   சீடர்களால் 
ஸ்ரீ மஹ  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு  யாகம்  நடத்துகின்றார்கள்.          செய்யப்படுகின்ற இடமோ-பல  யுகமாக தெய்வீக புண்ணிர்கள் யாகம் செய்த இடம்.  புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற 
ப்ரத்யங்கிர யாகத்தின்போது  யாககுன்டத்தில்  மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல்  .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி  செய்யப்படுகிறது  விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள்      இடப்படுகிறது. அதை தொடர்ந்து  வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர்   பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை  நடைபெறுகிறது   தொடர்ந்து யாகசாலையிலிருந்து    புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு  ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு  புனித நீர் ஊற்றி  அபிஷேகம் நடைபெறும்.  அன்று  அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம்  செய்யப்பட்டு இருக்கும்  தீபாரதனை நடைபெறும் 
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி  சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார்.  அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்   
யாக புகை   நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை   நாம் பார்ப்பதாலும்-தெய்வீக  உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை  கண்ட  பனிபோல் நம் குறைகள் 
பினிகள் அனைத்தும் பறந்து  விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம்  இது ..அணைவரும்  இந்த அமாவசை  யாகத்தில் கலந்து  கொண்டு   ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் 

மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு, 
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment