நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 8 November 2014

ஸ்ரீவித்யா உபாசனை: சிறு கண்ணோட்டம்


ஸ்ரீவித்யா உபாசனை: சிறு கண்ணோட்டம்.

ஸ்ரீவித்யா உபாசனை: சிறு கண்ணோட்டம்.
தெய்விக ஞானத்தைத் தேடும் ஸ்ரீவித்யா உபாசனையில் நான்கு நிலைகள் உள்ளன. 

1) மந்திர சித்தி - மூலபீஜமந்திரங்களை உச்சாடனம் மூலம் அடைதல் 

2) யந்த்ர சாஸ்திரம் - ஸ்ரீசக்கரம் போன்ற யந்த்ரங்களை பூஜித்து உபாசனை செய்தல் (மஹாமேரு, பிந்து தத்துவம், மஹத்துவம், நாற்பத்தி முக்கோணசித்தி). 

3) தாந்திர சாஸ்திரம் - மந்திர உச்சாடனத்தில் நன்கு தேர்ச்சி பெற்று, மந்திரங்களை கைகளின் அசைவினால் (முத்திரை) வாய்மூலம் உச்சரிக்காமல் துரிததேவ ஆராதனை செய்தல் 

4) யோக சாஸ்திரம்: புலன்கள், எண்ணம், சித்தவிருத்தி ஆகியவற்றை மன ஓய்வுக் கலை மூலம் அடக்கி யோக சித்தி பெறுதல். யோகமார்க்கத்தில் மந்திரசித்தியிலிருந்து ப்ரணவ சமாதிவரை 30 நிலைகள் உள்ளன. யோக சாதனையில், ஸ்ரீவித்யாமார்க்கமே உன்னதமான, சிறப்பான, பாதுகாப்பான வழிமுறை ஆகும்.
ஸ்ரீவித்யாயோக மார்க்கத்தின் இறுதிக்கட்டம் என்பது 36 தத்துவங்களைத் தாண்டுவதையே குறிக்கும். அவை உடல் தத்துவம் (1 முதல் 24),ஆன்ம தத்துவம் (25 முதல் 31), வித்யாதத்துவம் (32முதல் 36 வரை) ஆகும். 36ஆவது தத்துவம் ஆன்ம தத்துவம். யோகிகள் ஆன்மதத்துவத்தில் பல நாள்கள் தங்க நேரிடும். அதையும் தாண்டினால் அன்னையின் கிருபை.
சாதகன் குரு உபதேசம் பெற்று முறைப்படி இவற்றைச் செய்ய வேண்டும். அன்னையைத் துதிப்போம். அருள்பெறுவோம்.

No comments:

Post a Comment