ரகசியமாய் வைக்கபட்டுள்ள ஜன வசியம்
வசியத்தில் ஜன வசியம், தன வசியம்,சத்ரு வசியம்,ஸ்த்ரீ (பெண்) வசியம், புருஷ (ஆண்) வசியம், மிருக வசியம், தேவவசியம்,லோக வசியம்,ராஜ வசியம்,மூலிகையினால் வசியம், யந்திரத்தினால் வசியம் என பல உள்ளது. இங்கே கொடுக்கபட்டுள்ளது பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த ஒன்றாகும்.ரகசியமாய் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றும் ஆகும்.
கோரோசனையுடன், மச்ச கல், சிறுதேன் என அழைக்கப்படும் புற்றுதேனையும் சேர்த்து இழைத்து நெற்றியிலோ, உள்ளங்கால்களிலோ தடவிக்கொண்டு செல்ல, நமது எதிரிகள் முதற் கொண்டு சகலரும் வசியமாவார்கள். இது அனுபவத்தில் கைகண்ட முறையாகும். இதற்கு அளவு முறை ஏதும் இல்லை.அவரவர் தேவைக்கேற்ப்ப செய்து கொள்ளலாம்.
கோரோசனையை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.மச்ச கல் என்பது கடலில் வாழும் சுறா மீன் வகைகளில் மிக அபூர்வமாக அதன் தலை பகுதியில் கிடைக்க கூடிய ஒரு கல் ஆகும். புற்று தேன்-இது மண் குடிசை கரையான் புற்று போன்ற இடங்களில் சிறிய கொசுவை போல உள்ள தேனீக்களால் கட்டப்படும் கூட்டில் கிடைக்கும் தேன். இந்த கூடுகளில் அதிகபட்சம் 50 முதல் 100 மில்லி வரை தான் தேன் இருக்கும். கொசுததேன் எனவும் இதை கூறுகிறார்கள். (எங்கள் தேவைக்கு மலை மற்றும் வன பகுதிகளில் வாழும் மக்களின் மூலம் பெறுகிறோம்)
No comments:
Post a Comment