நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 20 July 2014

வாராஹி

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாக விளங்குபவள். வாராஹி
ஸ்ரீலலிதா திரிபுர சுந்தரி. உலகத்திற்கே தாயாக விளங்குபவள். அந்த தாயின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் வாராகி. ஸ்ரீலலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத் தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரட்சிப்பவளாகவும் விளங்குகிறாள்.

பில்லி, சூனியம், ஏவல், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளில் இருந்தும், பகைவர்களிடமிருந்தும் நம்மைக் காப்பவள் வாராஹி ஆவாள். வாராஹியை வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும். திருமணத் தடை நீங்கும். செவ்வாய் தோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். சிவப்பு மலர்மாலையும் மஞ்சள் புடவையும் அணிவித்தால் நினைத்த காரியம் கைகூடும்.

பன்றியின் முகம், பெண் உடல், 8 கரங்கள் கொண்டவள்.தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தண்டை, கலப்பைஆகியவற்றைத் தாங்கி அபயம், வரதம் காட்டி அருள்புரிகிறார். அணிவித்தால் நினைத்த காரியம் கைகூடும்.

 பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் வாராகி அம்மனை வணங்கினால் அனைத்து தொல்லைகளும் நீங்கப்பெற்று சுகம் பெறுவர்.
.அம்பிகைக்கு உரிய நான்கு நவராத்திரிகளுள், வாராகி நவராத்திரியும் ஓன்று. ஆடி அமாவாசைக்கு முன் வரும் ஓன்பது நாட்களில் இது கொண்டாடப்படும்

இவளை வழிபட உகந்த நாட்கள் அஷ்டமி, பௌர்ணமி நள்ளிரவு, கார்த்திகை வளர்மிறை பஞ்சமி போன்ற நாட்கள் வாராகி தேவியானவள் லலிதாம்பிகையின் சேனைத் தலைவி

நம்முடைய அனைத்து துன்பங்களையும் நம்மிடமிருந்து அகற்றி வாராகி அம்மன் நம்மைக் காப்பாள்

No comments:

Post a Comment