மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசை
படுத்தபட்டுள்ளது மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம். குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து
தெய்வமாகலாம்.
இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான் "காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய
முடியும். வேறு வழியே கிடையாது.
முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம். காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து முன்னேறுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார்.
அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.
காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே ஆத்மதரிசனம். இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.
"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.
சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!
படுத்தபட்டுள்ளது மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம். குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து
தெய்வமாகலாம்.
இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான் "காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய
முடியும். வேறு வழியே கிடையாது.
முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம். காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து முன்னேறுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார்.
அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.
காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே ஆத்மதரிசனம். இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.
"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.
சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!
No comments:
Post a Comment