நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 29 July 2014

கரூரில் மௌனசாமிகள் தரிசனம்



கரூரில் மௌனசாமிகள் தரிசனம் ...

>> தாயுமானவரின் பிரதான குருவாகிய மௌனசாமிகள் கரூரில் லஷ்மிராம் திரையரங்கத்தின் அருகாமையில் வஞ்சியம்மன் கோவில் தெருவில் ...ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிபவராக உள்ளார் ..தமிழகத்தில் நான்கு இடங்களில் இவரது சமாதி உள்ளது ..
>> நந்தீசர் சித்தரின் மாணவர் சாரமா முனிவர் ஆவார் . திருமூலர் மரபில் வந்தவர் வந்தவர் தான் சாரமா முனிவர் .....கயிலாய மலையிலிருந்து தமது சீட கோடிகளோடு திருச்சி மலைக்குன்றில் ‘”சாரமா முனிவர் மடாலாயம்’’ என்ற பெயரில் விளங்கி வந்தது.
>> மெளன குரு சுவாமிகள் ...தேசிகர் சிவயோகி தருமபுரம் ஆதீனத்தில் உபதேசம் பெற்று, பல புண்ணியத்தலங்களை தரிசித்து இறுதியாக, சாரமா முனிவர் மடாலாயத்தில் வந்து தங்கினார்.
>> மெளன குருவின் பிரதான சீடர்தான் தாயுமானவர்...ஒருமுறை மெளன குரு மடம் வழியாக தாயுமானவர் வந்தபோது மெளன குருவைக் கண்டு அவரது காலில் வீழ்ந்து வணங்கி, ஆசியும் பெற்றார். மெளன குரு சிவயோகி தாயுமானவரைக் கண்டவுடன் இவர் ஒரு சித்தயோகி என்பதை உணர்ந்து அவருக்கு தீட்சை அளித்து தமது சீடராக ஏற்றுக்கொண்டார். மெளன குரு உபதேசித்தருளிய யோக ஞான முறைகளை கடைப்பிடித்து, நிஷ்டைப் பயிற்சியில் ஆழ்ந்து தியானித்துவந்தார்.
>> மோன நிலையே குருவடிவமாகக் கண்டுணர்ந்து குருநாதரை வணங்கி ஆனந்த மெய்விதிர்ப் பெய்தி .. அந்த உணர்வைப் பாடல்களாகப் பாடினார் தாயுமானவர்.அன்னையர், உற்றார் உறவினர் அவரைத் திருமணம் செய்துள்ள கொள்ள வற்புறுத்தினர்.திருமணத்தில் நாட்டம் இல்லாத காரணத்தால் நிர்வாண தீட்சை செய்து துறவு நிலையை அளிக்குமாறு தம் குருநாதரிடம் கேட்டார். சிறிது காலம் இல்லறத்திலிருந்து மீண்ட பின்பே உனக்கு அது வாய்க்கும் என குருநாதர் இடமிருந்து அருள் வாக்கு வந்தது. வேறு வழியின்றி இப்போது திருமணத்திற்கு சம்மதித்தார். மட்டுவார் குழலி எனும் குணவதியை தாயுமானவர் மணந்து கொண்டார். கனகசபாபதி எனும் ஒரு ஆண் மகவு பிறந்ததும், மனைவி இறைவனடி சேர்ந்தார். மிஞ்சியிருந்த இல்லறப்பற்றும் அறவே தீர்ந்து போக, தாயுமானவர்துறவு நெறிக்கு முற்றிலும் தம்மை தயார்ப்படுத்திக் கொண்டார். தம்முடைய செல்வத்தை எல்லாம் தமையாரிடம் ஒப்படைத்து விட்டு உலகப்பற்று நீக்கிக் கோவண சந்தியாசியானர் தாயுமானவர். .சிந்தையெல்லாம் யோக நெறி நின்று வாழும் சித்த வாழ்வு நிலைத்தது.-

>> வெயிலின் ஒளியிலே காய்ந்த பொருள் பலகாலம் சிதையாமலிருப்பது போல், சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவருக்கு உடலும் ஆன்மாவும் ஒரு நாளும் அழிவதில்லை.முக்திக்கு வழி அறிவால் ஐம்புலன்களைக் காத்து வாழ்வதும்தான். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமானவர்.உணர்வும் நினைவும் ஒடுங்கிய பின்னர் மனமானது சுத்தசூன்யமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலற்று வெறுமையாக இருக்கும்.மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மனவெறுமை நிலையே தேவையாகிறது என்பதை அறிந்து தெளிந்தார் தாயுமானவர்.உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும்.அதற்கு வழி ஒன்றேதான் நெற்றிக்கு நேராகச் சுழுமுனையில் வியாபித்திருக்கும் ஞானக் கினியைக் காணவேண்டும். அப்படி கண்டுவிட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்ற மகரிஷிகளின் ஆழ்மனது தாயுமானவருக்குப் பிடிபட்டது.

No comments:

Post a Comment