நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 21 June 2014

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்.
 இந்த அறகட்டளை சார்பாக  பிரதி மாதம் அமாவசை தோறும்  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்ங்கிரா தேவிக்கு குருஜி  ஆசிர்வாதத்துடன் அம்பாள் அனுகரகத்துடன்  ப்ரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது 
இங்கு செய்யப்படுகிற யாகம்   "அன்புடன் உலக மக்கள் அனைவரும் னந்தமாய் வாழ வேண்டும்" என்ற ஒரே   தாரக மந்திரத்தில் நடைபெறுகிறது   இந்த தாரக மந்திரம் நாம் எதை  கேட்டாலும் நமக்கு  கூடுக்கும் .சந்தோஷத்தில்  கூட தோஷம் இருக்கு ஆன  னந்த்தில் தோஷம் கிடையாது  அந்த  ஆனந்தம் 27 வகை இருக்கு அந்த 27 வகையான
 ந்ததை நமக்கு அள்ளிகொடுக்க ந்த சொரூபமாக 
மங்களா ரூபிணியாக ந்தம்னா  புன்னகையோடு  
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த இடத்தில் கமலத்தில் கட்சி அளிக்கிறாள். ப்ரத்ங்கிரா எல்லா இடத்திலும் உக்கிர தெய்வமாக இருப்பாள்  ஆனா  இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் புன்னகையோடு கட்சி அளிக்கிறாள்.குருவோட ஆசிர்வாதம் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.
 குருவோட ஆசிர்வாதம் இல்லை என்றால் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.கிடைக்காது குரு இல்லாமல் இந்த வித்தையும்  கத்துகிட்டாலும் குரு இல்லாமல் இதை செய்தாலும் சித்திபண்ண  முடியாது.

நாம் அற வழியில் நடந்து குருவின் ஆசிர்வாதத்துடன் தருமத்தையும் தெய்வத்தையும் நாடினால் தருமமும் தெய்வமும் நம்மை தேடி
நாடி வரும்

மானாமதுரை சுவாமிஜி

No comments:

Post a Comment