நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 10 June 2014

ஸ்ரீ  சரபேஸ்வரரின் இன்னோரு இறக்கையாக தோன்றியவள் சூலினி  துர்க்கன்  என்னும் அசுரனை வதம் செய்ததால் இவளுக்கு துர்கா தேவி  நாமம் ஏற்பட்டது தன்னை சரண் அடைந்தவர்களை காப்பதில் பிரம்மன்னுக்கு ஈடானவல்  சூலினி துர்கா திரிபுரந்தகர்களை வெற்றி கொள்ள சிவபெருமானுக்கு   பக்கபலமாக நின்றவள்.
இவள் சூலாயுதம் ஏந்தியிருப்பவள். பஞ்ச பூதங்களும் இவளுக்குக் கட்டுப்பட்டது. உயிர்களிடத்தில் உள்ள பயத்தைப் போக்குபவள்.

அன்னை ஸ்ரீ சூலினி துர்கா -இவள் மாடன் முதலிய துர்தேவதைகளின் ஏவல்,மற்றும் நவக்கிரக தோஷம் நீக்கும் சக்தியுள்ள தெய்வம்.
நவக்கிரங்களில் எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும்,குறிப்பாக ராகு கிரகம் மோசமாக இருந்தால்  தான் மாந்திரீக பாதிப்புகள் உண்டாகும்.எதுவாக இருப்பினும்  அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கையை வழிபட நன்மை உண்டாகும்


ஸ்ரீ சூலினி துர்கா மந்திரம் 
ஜ்வல ஜ்வல சூலினி!!
துஷ்ட கிரஹ ஹூம் ப்பட் ஸ்வாஹா!! 

No comments:

Post a Comment