நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 29 June 2014

சென்னிமலை கும்பாபிஷேகம்

சென்னிமலை அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 
 ஜூலை மாதம்  07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று 
காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள்  அருள் சுப்பிரமணியசுவாமி  திருக்கோவில்
பரிவார சகித நூதன இராஜகோபுரம் மற்றும் சென்னி ஆண்டவர்க்கு உத்தமபட்ச 
மஹா  கும்பாபிஷேகம் திருக்குட  நன்னீராட்டு நடைபெருகிறது 
அன்று  காலை 8.00 மணி  முதல் அடிவாரம் செங்குட்டைதோட்டத்தில் அன்னதானம் 
நடைபெறும்.   அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில்  கலந்து கொண்டு சென்னிமலை அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள் 

05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை  கும்பாபிஷேகம் 
நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர்  திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர் 
 www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org



மேலும் தகவல்கள்களுக்கு:
கோவில் அலுவலகம் 04294 250223.
மலைக்கோவில் 04294 293595,292263

No comments:

Post a Comment