நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 16 March 2014

பவுர்ணமி விரத நாளில் உணவு முறை

பவுர்ணமி நாட்களில் விரதம் இருப்பவர்கள் மரக்கறி உணவையே உட்கொள்ள வேண்டும். புளிப்பு, காரம், வெங் காயம், பூண்டு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அரை வயிற்றுக்குச் சாப்பாடு, கால் வயிற்றுக்கு தண்ணீர் மீதி கால் வயிற்றில் காற்று என்று எப்போதுமே இருப்பது நல்லது அதிலும் குறிப்பாக பவுர்ணமி நாட்களில் கண்டிப்பாக இப்படி இருக்க வேண்டும்.

சாந்திராயணத்தைப் பவுர்ணமியன்று பதினைந்து கவளம் உணவு சாப்பிட வேண்டும் அதற்கு மறுநாள் பிரதமையன்று பதினான்கு கவளமும் அதற்கு அடுத்த நாள் அதாவது துவிதியை அன்று பதின்மூன்று கவளமுமாக இப்படியே குறைத்துக் கொண்டே போய் அமாவாசை அன்று முழுப்பட்டினி இருக்க வேண்டும்.

பிறகு அமாவாசையின் மறுநாள் சுக்ல பட்சப் பிரதமையன்று ஒரு கவளமும் அதற்கு அடுத்த நாள் துவிதியைக்கு இரண்டு கவளம் என்றும் இப்படி ஒவ்வொரு நாள் திதிக்கும் கவளங்களைக் கூட்டிக்கொண்டு பவுர்ணமி அன்று பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment