நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 19 March 2014



ஸ்ரீ சரபேஸ்வரரின் இரு இறக்கைகளில் ஒன்றாக தோன்றியவள் ப்ரத்தியங்கிரா தேவி. இவள் பயங்கரமான உருவமும், கருணை உள்ளத்தினையும் கொண்டவள். இத்தேவிக்கு சிங்கமுகத்தினை போன்ற ஆயிரம் திருமுகங்கள் உண்டு. 

தட்சனை அழித்திட நினைத்த சிவன், வீரபத்திரரை அனுப்ப, அவருக்கு தட்சனை அழிக்கக்கூடிய அபரிமிதமான சக்தியை அளித்தவள் இப்பிரத்தியங்கிரா தேவி என்னும் பத்ரகாளியேயாவாள். 

மேலும் தாருகாசுரன் என்னும் அரக்கனை அழித்திட சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவளும் இப்பத்ரகாளியேயாவாள். ப்ரத்யங்கிரா தேவியின் மந்திரத்தினை கண்டு பிடித்தவர்கள் பிரத்யங்கரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகளாவார்கள். 

சக்திமிக்க இப்பத்ரகாளியால் படைக்கப்பட்வர்களே காளி, வைஷ்ணவி, சாந்தா, சாமுண்டி, முண்டபார்த்தினீ, த்வரிதா, பத்ரா, காத்யாயினி என்னும் வடிவங்களாகும். இவள் பைரவரின் மஹிஷியாவாள்.

No comments:

Post a Comment