நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 7 May 2016

அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை

அட்சயம் தரும் திருதியை =அட்சய திருதியை



அட்சயம் என்றால் அழியாதது , திருதியை என்றால் திரிந்து பெருகுதல்.


அட்சயம் யாரிடம் இருக்கும் சூரிய தேவரிடம் இருக்கும் ! அது ஏன் சூரிய தேவரிடம் என்றால் எல்லா ஜீவ ராசியின் புண்ணிய கணக்கு என்பது சூரிய தேவருக்கே தெரியும் ஏனென்றால் சிருஷ்டியின் முதல் படைப்பு அவர்தான் அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை காரகர். ஜன்ம ஜன்மமாக ஒருவரது பிறப்பு கணக்கில் அவரது பித்ருக்கள் முதற்கொண்டு எந்த ஜீவராசியிடம் சுயநலமில்லாத பரம்பரை பரம்பரையாக அதீத புண்ணிய பலம் இருக்கிறதோ அவரிடமே சூரிய தேவர் அட்சய பாத்திரத்தை அளிப்பார் ! மற்றவருக்கு அந்த ஒரு ஜீவ ராசி தீராத அழியாத அந்த பாத்திரத்தில் இருந்து உண்மையான தேவைபடுவோருக்கு அள்ளி குடுபதர்க்காக.

அப்படி அட்சய பாத்திரம் பிரபு ஸ்ரீ ராமர், மணிமேகலை, பாண்டவர்கள், விக்கிரமாதித்யர் என்று பூலோக நல் ஆத்மாக்களிடம் சூரிய தேவர் கொடுத்திருக்கிறார்.

ஆகவே நீங்கள் உண்மையில் மற்றவர் நலன் கருதும் ஆத்மாவாக இருந்தால் அழியாதது என்ற அர்த்தம் கொண்ட அட்சயம் எனும் புண்ணியத்தை திரிந்து பெருக்கும் நாளன வருகிற சித்திரை மாத வளர்பிறை திருதியையில் தர்மம் புண்ணியம் சேர்க்கும் என்றென்றும் நீடித்து இருக்கும் அழியாத எண்ணில் அடங்கா பெருக்கி தந்து இருக்கும் அட்சய திருதியை உபயோகபடுத்தி பயன்பெறுவோம். புண்ணியவான் ஆகிடுவோம்.

அதை விட்டு விட்டு ஒரு அற்புதமான நாளை அழிய கூடிய பொருள் ஆசையில் செலுத்தி அழியாத புண்ணியத்தை சேர்க்கும் வாய்ப்பை இழந்து விடாதீர்கள்.

அபரிதமான அட்சய திருதியை உண்மையான பலன் தரக்கூடிய நேரம் இந்த ஆண்டு எந்த நேரத்தில் வருகிறது தெரியுமா ?

ஞாயிறு இரவு 09:05 முதல் திங்கள் கிழமை சூரிய உதயத்திற்கு முன் காலை 5:30 வரைக்குள் இருக்கும் திரிதியை திதியில் அமையும் ரோகினி நட்சத்திரத்தில் நீங்கள் புண்ணியம் சேர்க்கும் செயலில் ஈடுபட்டால் அதி உத்தமமான அபரிதமான புண்ணியம் பெருக்கும் பலன் கிடைக்க பெறுவீர்கள்.

திங்கள் கிழமை அமிர்த சித்த யோகத்தில் காலை 5:30 மணி முதல் இரவு 7:13 வரை கிடைக்க பெரும் அட்சய திருதியை பலனை காட்டிலும் நான் மேல் கூறிய நேரத்தில் செய்தால் அதிக புண்ணிய பலன் பெறலாம்.

புண்ணியம் பெருகும் காரியம் என்றால் எதை செய்யலாம் என்றால் ?

புண்ணிய தீர்த்தம் ஆடுதல்
புண்ணிய ஸ்தலம் செல்லுதல்
புண்ணியவான்கள் தரிசனம் ஆசிகள் பெறுதல்
புண்ணிய யாகம் செய்தல்
புண்ணிய தர்மம் தானம் செய்தால்
புண்ணிய உபவாசம் (உறக்கம் உணவு இன்றி இருப்பது)
புண்ணிய பக்தி நாம மந்திர உச்சாடனம்
புண்ணிய புராண இதிகாசதில் லயத்தல்

நான் சொன்ன அட்சய திருதியை நேரமான ஞாயிறு இரவு 9:05 முதல் திங்கள் கிழமை விடியும் முன் அதி காலை வரை 5:30 வரை இருக்கிற சூரிய தேவர் கிழமையில் செய்தால் யாருக்கு தெரியும் சூரிய தேவர் உங்களுக்கே இந்த ஜன்மம் இல்லை என்றாலும் ஒரு ஜன்மத்தில் அட்சபாதிரம் அளிக்கலாம்.

அட்சயம் என்பது லக்ஷ்மி தான் செல்வம் தான் அனால் அந்த செல்வத்தின் மூலம் புண்ணியம் ஆகும். அட்சயம் என்ற புண்ணியம் ஆகும். புண்ணியம் இல்லாத எவருக்கும் லக்ஷ்மி என்ற செல்வம் என்ற அட்சயம் கிடைக்காது

புண்ணியம் சேர்க்காமல் வெறும் பொருள் வாங்கி வைத்து பெருகும் என்றால் நம்மை போல் மூடர்கள் யாரும் கிடையாது.

நான் பார்த்தவரை இது எந்த ஜோதிடரும் கூறாதது உங்களுக்காக நான் இதை கூறுகிறேன் விட்டுவிடாதீர்கள்.

மதியால் விதியை வெல்லும் நேரம் அந்த இறைவன் நமது விதியை மாத்தி நமக்கு எழுதி தரும் வாய்ப்பு.

ஞாயிற்று கிழமை என்ற சூரிய தேவர் கையில் இருக்கும் அட்சயம் என்ற பெருகும் செல்வ லக்ஷ்மி திருதியை அன்பு கருணை புண்ணியம் என்ற ரோகினி அம்ச சந்திரன் அமைப்பில் இருக்கிறது இந்த இரவு.

No comments:

Post a Comment