நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 20 November 2015

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு மைத்ர முகூர்த்தம்


கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு  
மைத்ர முகூர்த்தம்

கடன் தொல்லை தீர ஒரு அரிய வாய்ப்பு
மைத்ர முகூர்த்தம்
23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை






இந்தக் கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் மூன்று வித கடன்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அவையே தேவ கடன், பித்ருகடன் மானுஷ கடன், அத்துடன் பெற்ற கடன் என்ற ஒன்றும் மனிதனை வாட்டி எடுத்து விடுகிறது. தேவ கடனை ஹோமங்கள், நித்ய கர்மங்கள், ஆலய வழிபாடுகள் செய்வதால் தீர்த்துக் கொள்ள முடியும்.

இதிகாச புராணங்கள் படிப்பதாலும், கேட்பதாலும் ரிஷி கர்ப்பணம் செய்வதாலும் தீர்த்துக் கொள்ளலாம். பித்ரு கடனை - பெற்றவர்களைக் காத்து வருவதாலும், அவர்கள் காலமான பிறகு அவர்களது திதி நாளில் சிரத்தையுடன் சிரார்த்தம் (திவசம்) செய்வதாலும் தீர்த்து விடலாம்.




பெற்ற கடன் என்பது பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி கல்வி கற்க வைத்துத் திருமணம் செய்வித்து வாழ்க்கையை நன்றாக ஆக்கித் தருவதால் சுமை குறையும். ஆனாலும் பெற்றோர்களுக்குப் பிரதி கடனைத் தீர்க்காமல் நன்றி மறந்து விடுகிறார்கள்.


மனித கடனை - மனிதாபிமானத்தோடு ஏழை-எளிய மக்களுக்கு உபகாரம் செய்வதாலும், முடிந்த அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதாலும் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் பெற்ற கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பித்தர முடியாமல் அவஸ்தைப் படுகிறார்களே! 

மைத்ர முகூர்த்தம்
23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை


இதற்குத் தீர்வு யாதெனில் கடன் வாங்கியதில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்த நேரத்தில் திருப்பி கொடுத்தால், அந்த கடனை எளிதில் அடைத்து விடலாம் என்ற தேவ ரகசியத்தைக் கடன் பெற்றவர்கள் உணர்ந்து அறிந்து விட்டால் இந்த வகை மனுஷ கடன் பரிதியைக் கண்ட பனிபோல விலகிவிடும்.




கடன் வாங்கியவர்கள், அதைக் கொடுத்துவிட்டு விழிப்போர் கலங்கும் வகையில் நடந்து கொள்வதும், அதைத் திருப்பக் கொடுக்கப் பல பரிகாரங்களைச் செய்வதும் இக்காலக் கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளில் காணலாம்.




ஓம் அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸவ:
நமோஸ்துதே மமோசேஷம் ருணமாக விநாயக- என்று பிரதி செவ்வாய்க்கிழமை அன்று அங்காரகனுக்குத் தீபம் ஏற்றுதலும் குணஹர லிங்காஷ்டகம், கடன் தீர்கணபதி அஷ்டகம், கடன் தீர்க்கும் சுதர்ஸனாஷ்டகம், காலபைரவ துதி. என்று பல வழிபாட்டுத் துதிகள் பரிகாரங்களைச் செய்து வருகிறார்கள். மன திருப்திக்காகச் செய்யும் இவை சிலருக்குப் பலனும் தருகின்றன.

ஆனால், காலம் நமக்குத் தோழனாக நின்று வழிகூறும் என்பதை - நாள் செய்வதை நல்வோர் செய்யார் - என்ற பழமொழியின் வழியாக அறிந்து காலத்தைப் பயன்படுத்தலாம். நல்ல நேரத்தையும் நமக்கு நன்மைகள் புரியும் காலத்தையும் தான் முகூர்த்த வேளை என்கிறோம். ஹோமம் முதலிய சுபநிகழ்ச்சிகள் செய்ய பிரம்ம முகூர்த்தத்தை (அதிகாலை 4-6) பயன்படுத்துகிறோம்.

திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், செய்ய சுபலக்ன முகூர்த்தத்தைப் பயன்படுத்துகிறோம். குட முழுக்குப் பெருஞ்சாந்தி பெருவிழா ஆலய சுப பூஜைகள் செய்ய நேத்ர ஜீவனுடன் கூடிய முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம். அரசு அனுகூலம், பதவி உயர்வுக்கு - இந்திர முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம்.

லட்சுமி கடாட்சத்துடன் தொழில் வளர, செல்வநிலை உயர லட்சுமிகுபேர வேளையை (வியாழன் மாலை 5-8 மணி) பயன்படுத்துகிறோம். ஆனால், மனிதனைப் படாதபாடுபடுத்துகிற கடன் தொல்லையைத் தீர்த்திட மைத்ர முகூர்த்தம் என்ற மதிய வேளையைப் பயன்படுத்த இதுவரை யாருக்குமே தெரியவில்லை.

இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறுதொகையை அடைத்து விட்டால் வாங்கிய கடன் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் அடைந்து நிம்மதி அடையலாம் என்று சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளது. மார்பளவுக் கடனையும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் - கால விதானத்தை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் இயக்க நிலைப்படி கணிக்கப்பட்டுள்ளது.



கடன் தீர்ப்பதற்கு வேண்டிய காலத்திற்கு மித்ர முகூர்த்தம் (மித்ர-நட்பு) நமக்கு சாதகமாகச் செயல்படும் நேரம் என்று பெயர். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பழமொழிக்கேற்ப, மற்றவர்களை விட்டு சிபாரிசும், மற்ற துர்பிரயோக மார்க்கமும் தேடாமல் நேரடியாகக் கடன் கொடுத்தவரிடமே ஒரு சுபவேளையில் நேரில் சென்று வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை இன்முகத்துடன் திருப்பிக் கொடுத்து வரல் வேண்டும்.




மித்ர முகூர்த்தம் என்று சொல்வழக்கில் இருந்தது மாறி மைத்ர முகூர்த்தம் என்று வந்ததாக வருண பரிகார விளக்க விதி சொல்கிறது. பொதுவாகக் கணக்கிட்டுக் கூறும் மைத்ர முகூர்த்தம் என்றும் தனிநபர்களுக்குக் கணக்கிட்டுக் கூறும் மைத்ரே முகூர்த்தம் என்றும் இருக்கிறது.




இதன்படி இந்திய தேசத்தில், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, கேரளா, ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், அந்தமான், லட்சத்தீவுகள் ஆகியவற்றுக்கு ஒன்றாக இருக்கும். நேர வித்தியாசம் வருவதால் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 2 மணி நேரம் வித்தியாசப்படுவதால், தொலைத் தொடர்பு வழி தொழிலில் கடன் வைத்திருப்போர் இந்திய தேச நேரப்படி கணக்கிடாமல் அந்நாட்டு நேரத்தில் மட்டும் கடன் தீர்க்க வேண்டும்.




அமெரிக்காவில் உள்ள ஒரு கம்பெனியிடம் இந்தியா கடன் வாங்கி இருந்தால், அவர்களது பகல் பொழுதில் உள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில் தான் கடன் அடைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 10.15 மணி முதல் 12.15 மணி வரை இந்த கடன் அடைக்கும் நேரம் வந்தால் சனி இரவு 10.30 மணிக்கு கடன் தொகையை ஆன்லைனில் கட்டி விடலாம்.














1 comment: