நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 24 November 2015

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை.


சித்தர்கள் வாழும் 
திருவண்ணாமலை.


கைலாயத்திற்க்குச் சென்றால்தான் சிவ பெருமானை தரிசிக்க முடியும் என்று முன்னொரு காலத்தில் சொல்லப் படுவது உண்டு.
கைலாயத்திற்க்குச் செல்லாமலே தமிழ்நாட்டில் சிவ பெருமானை காண முடியும் என்று விதியை மாற்றிய பெருமை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உண்டு.


'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று தான் சிவபெருமானை அடியவர்கள் எல்லோரும் பாடி அகம் மகிழ்ந்திருக்கிறார்கள்.சிவபெருமானே விரும்பி அமர்ந்த இடம் தமிழ்நாட்டில் இரண்டு உண்டு.ஒன்று...சதுரகிரி மலை.இன்னொன்று திருவண்ணாமலை.

இறைவன் எங்கு குடியிருக்கிறானோ அங்குதான் சித்தர்களும் குடியிருப்பார்கள்.சித்தர்களுக்கு எல்லாம் தலயாயச் சித்தர் முதல் சித்தர் சிவபெருமான்தான்.தலைவர் இருக்கும் இடத்தில்தானே தொண்டர்களும் குடியிருப்பார்கள்?

அதனால் திருவண்ணாமலையில் சிவா பெருமானுக்கு உறுதுணையாக,காலம் காலமாக நாம் பெரிதும் போற்றும் பதினெட்டு சித்தர்களும்,அவர்களுக்கு பக்கபலமாக 178 சித்தர்களும் இன்றைக்கும் அரூபமாக நடமாடி மாடிக் கொண்டுருக்கிறார்கள்.கைலாய மலையில் கூட காண கிடைக்காத அதிசயம் இது.


மலை மேல் சிவ பெருமான் அமர்ந்திருந்தாலும் அவரது எண்ணம் எல்லாம் பூலோக மக்களின் நலன் மீது தான் இருந்தது.அதற்கு அடையாளம்தான் திருவண்ணாமலையில் குடிகொண்டு இருக்கும்
அருணாச்சலேஸ்வரர் கோவில்.


அத்தகைய புண்ணிய மலையை நமது தமிழகம் பெற்றிருக்கிறது என்றால்,இதை விட வேறு பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?


ஆனால் -

நிறைய பேருக்கு திருவண்ணாமலை பற்றிய முழு வரலாறு தெரியவில்லை.அங்கு நமக்காக உதவிகளை செய்யும் சித்தர்களைப் பற்றியும் சரியாக தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்.


'சதுரகிரி'யைப் பற்றி சொல்லும் பொழுது,எவ்வளவு பெருமைப்படுகிறோமோ,அதை விட பன்மடங்கு பெருமை கொள்ளும் அளவுக்கு திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு.


அந்த அழகிய-அற்புதமான திருவண்ணாமலை வரலாற்றையும்,இதுவரை வெளியே வராத பல்வேறு அற்புத தகவல்களையும் அகத்தியப் பெருமான் ஜீவநாடியில் எடுத்துரைத்ததை நாம் இந்த புதிய தொடரில் பார்க்க இருக்கிறோம்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால்,மொத்தம் 205 சித்தர்கள் திருவண்ணாமலையில் இருக்கிறார்கள்.இதை விட்டால் சதுரகிரிக்கு அடிக்கடிசென்று வருவார்கள்.


அந்த சித்தர்கள் யார்-யார்?


அத்திரி மகரிஷி,மச்ச முனிவர்,கோரக்கர்,கிராம தேவர்,துர்வாசர்,சட்டை முனிவர்,அகத்தியர்,போகர்,புசுண்டர்,உரோமா மச்சித்தர்,யூகி முனிவர்,சுந்தரானந்தர்,அழகனந்தா,பிரம்ம முனி,காலங்கி நாதர்,நந்தி தேவர்,தன்வந்திரி,குரு ராஜரிஷி,கொங்கனர்,உதயகிரிச் சித்தர்,பிகுஞ்சக ரிஷி ,மேக சஞசார ரிஷி,தத்துவ ஞான சித்தர்,காளமீகா ரிஷி,விடன முனிவர்,யாகோபு முனிவர்,அமுத மகாரிஷி,சூதமா முனிவர்,சிவத்தியான முனிவர்,பூபால முனிவர்,முத்து வீரமா ரிஷி,ஜெயமுனி,சிறு வீரமா முனி,வேதமுனி,சங்கமுனி, காசிபமுனி,பதஞ்சலி முனி, வியாகிரம மகாரிஷி,ஜனகமா முனி,சிவப்பிரம்ம முனி,பராச முனி,வல்ல சித்தர்,அஸ்வணி தேவர், குதம்பைச் சித்தர்,புண்ணாக்கு சித்தர்,யோகச்சித்தர், கஞ்சமலைச் சித்தர்,திருமூலநாதர்,மவுனச்சித்தர்,தேகசித்திக் சித்தர்,வரரிஷி, கவு பாலச்சித்தர்,மதிராஜ ரிஷி,கவுதமர்,தேரையர்,விசுவனித் தேவர், அம்பிக்கானந்தர், டமாரானந்தர்,கையாட்டிச்சித்தர், கண்ணானந்த சித்தானந்தர்,சச்சிதானந்தர்,கணநாதர்,சிவானந்தர்,சூரியானந்தர்,சோகுபானந்தர்,தட்சிணா மூர்த்தி,ரமநாதர் மதிசீல மகாமுனி,பெரு அகத்தியன்,கம்பளி நாதர்,புலஸ்தியர்,திரி காலாக்கயான முனி,அருட் சித்தர்,கவுன குளிகை ச்சித்தர்,ராஜரிஷி வசந்தமாமுனி,போதமுனி,காங்கேய ரிஷி,கான்சன முனி,நீயான சமாதிச்சித்தர்,சாந்த மஹா ரிஷி,வாசியோகச்சித்தர்,வாத சாந்த மகாரிஷி,காலாட்டிச்சித்தர்,சத்தரிஷி,தேவ மகாரிஷி,பற்ப மகாரிஷி, நவநாத ச்சித்தர்,அடவிச்சித்தர்,நாதந்தச்சித்தர்,
ஜோதிரிஷி,பிரம்மானந்த ரிஷி,அநுமாதிச்சித்தர்,ஜெகராஜ ரிஷி,நாமுனிச்சித்தர்,வாசுதேவ மகாரிஷி,பாலை யானந்தர்,தொழுகன்னிச்சித்தர்........


இந்த சித்தர்களைப்பற்றி - அவர்கள் செய்து வரும் விந்தைமிகு செயல்களைப் பற்றி,ஆன்மீகத்திற்காகவும்,மருத்துத்திற்காகவும் ஆற்றி வரும் தொண்டுப்பற்றி முதலில் பார்ப்போம்.


இது தவிர இன்னும் பாக்கி இருக்கும் 150 மகாசித்தர்கள் பற்றியும் இவர்களால் மனித குலத்திற்க்கு ஏற்படும் ஆதாயங்களைப் பற்றியும்,
இன்றைக்கும் திருவண்ணாமலையில் இவர்கள் எந்த உருவத்தில் உலா வருகிறார்கள்?.இவர்களை எந்த நிலையில் தரிசித்தால் அவர்களுடைய கருணை பார்வை நமக்குக் கிடைக்கும்? என்பதைப் பற்றி அகத்தியர் தனது ஜீவ நாடியில் எடுத்துரைத்திருக்கிறார்.


நாம் வாழ்ந்ததின் பலன் நமக்குக் கிடைக்க வேண்டும்,நமது கஷ்டங்கள் விலக வேண்டும்.நினைத்ததை அடைய வேண்டும் பிரார்த்தனைகள் செய்ய முடியாதவர்களுக்கும் நல்ல பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அகத்தியர் அருளால் இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.


அதற்க்கு முன்பு,நாம் அனைவரும் இந்த கார்த்திகை மாதத்தில் முதலாவதாக திருவண்ணாமலை ஈஸ்வரனை ஒரே ஒரு தடவை கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வோம்.அவனருள் நிச்சயமாக எல்லோருக்கும் கிடைக்கும்.

No comments:

Post a Comment