நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 9 November 2015

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!


செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!



சந்திரனுக்கு தட்சன் தனது 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்;அவர்களில் ரோகிணி,கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார் சந்திரன்;இதனால் மனம் வருந்திய மற்ற மனைவிகள் தனது தந்தையிடம் புகார் செய்தனர்;

தட்சன் தனது மருமகன் சந்திரனைச் சந்தித்து, “நீ அழகாக இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறாய்;உன் முகத்தின் பிரகாசம் மறையட்டும்” என்று சாபம் இட்டார்;

இதனால் சந்திரனின் கலைகள் தேயத் துவங்கின;இதுவே வளர்பிறை,தேய்பிறை என்று உருவாகக் காரணமாகவும் அமைந்தது;
ரோகிணியும்,கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்;தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்ததால்,சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை;

உடனே ரோகிணியும்,கார்த்திகையும் சிவனை நினைத்து தவம் செய்யத் துவங்கினர்;அவர்களது நீண்ட கடும் தவத்தினால் சிவன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்தார்;

கார்த்திகை,ரோகிணி இருவரின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் கணவன் சந்திரனின் சாபம் தீர,சந்திரன் தனது தலை மீது அமரும் பாக்கியத்தை அருளினார்;

ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசைக்கு மூன்றாவது நாளன்று வரும் திதி த்ரிதியை ஆகும்;மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால்,சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்;தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வற்றாத செல்வ வளத்தைப் பெறுவார்கள்

No comments:

Post a Comment