நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 6 November 2015

பொருளாதாரம் தரும் குபேர விரதம்

பொருளாதாரம் தரும் குபேர விரதம்




பூசம் நட்சத்திரம் வரும் நாட்களிலோ அல்லது நிறைந்த அமாவாசை நாட்களிலோ அசைவம் சேர்க்காமல், விரதம் இருந்து குபேரனை மனதில் தியானித்து குபேரனுக்கு பூ பழங்கள் படைத்து,



ஏதாவது இனிப்பான நிவேதன பொருளை வீட்டில் தயார் செய்து, அதை குபேரனுக்கு படைக்க வேண்டும்.

குபேரனை மனதில் தியானித்து பொருளாதார உயர்வுக்காகவும்,வறுமை நிலை போகவும் மனதால் தியானித்து வரவும். முடிந்தவரை குபேரனின் கீழ்க்கண்ட 108 துதிகளை சொல்லி வரவும். கண்டிப்பாக பொருளாதார பிரச்சினைகள்,வறுமை நிலைகளில் இருந்து குபேரன் உங்களை காப்பார்.

* அழகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே போற்றி சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி சிவபூஜை பிரியனே போற்றி சிவ பக்த நாயகனே போற்றி சிவ மகா பக்தனே போற்றி சுந்தரர் பிரியனே போற்றி சுந்தர நாயகனே போற்றி சூர்பனகா சகோதரனே போற்றி செந்தாமரைப் பிரியனே போற்றி செல்வ வளம் அளிப்பவனே போற்றி செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி சொர்ணவளம் அளிப்பவனே போற்றி சொக்கநாதர் பிரியனே போற்றி சௌந்தர்ய ராஜனே போற்றி ஞான குபேரனே போற்றி தனம் அளிக்கும் தயாபரா போற்றி தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி திருவிழி அழகனே போற்றி திருவுரு அழகனே போற்றி திருவிளக்கில் உறைவாய் போற்றி திருநீறு அணிபவனே போற்றி தீயவை அகற்றுவாய் போற்றி துன்பம் தீர்த்திடுவாய் போற்றி தூயமனம் படைத்தவனே போற்றி தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி தேவராஜனே போற்றி பதுமநிதி பெற்றவனே போற்றி பரவச நாயகனே போற்றி பச்சை நிறப் பிரியனே போற்றி பவுர்ணமி நாயகனே போற்றி புண்ணிய ஆத்மனே போற்றி புண்ணியம் அளிப்பவனே போற்றி புண்ணிய புத்திரனே போற்றி பொன்னிற முடையோனே போற்றி பொன் நகை அணிபவனே போற்றி புன்னகை அரசே போற்றி பொறுமை கொடுப்பவனே போற்றி போகம்பல அளிப்பவனே போற்றி மங்கல முடையோனே போற்றி மங்களம் அளிப்பவனே போற்றி மங்களத்தில் உறைவாய் போற்றி மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி முத்து மாலை அணிபவனே போற்றி மோகன நாயகனே போற்றி வறுமை தீர்ப்பவனே போற்றி வரம் பல அருள்பவனே போற்றி விஜயம் தரும் விவேகனே போற்றி வேதம் போற்றும் வித்தகா போற்றி வைர மாலை அணிபவனே போற்றி வைகுண்டவாசப் பிரியனே போற்றி நடராஜர் பிரியனே போற்றி நவதான்யம் அளிப்பவனே போற்றி நவரத்தினப் பிரியனே போற்றி நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி வளம் யாவும் தந்திடுவாய் போற்றி ராவணன் சோதரனே போற்றி வடதிசை அதிபதியே போற்றி ரிஷி புத்திரனே போற்றி ருத்திரப் பிரியனே போற்றி இருள் நீக்கும் இன்பனே போற்றி வெண்குதிரை வாகனனே போற்றி கைலாயப் பிரியனே போற்றி மனம் விரும்பும் மன்னவனே போற்றி மணிமகுடம் தரித்தவனே போற்றி மாட்சிப் பொருளோனே போற்றி யந்திரத்தில் உறைந்தவனே போற்றி யௌவன நாயகனே போற்றி வல்லமை பெற்றவனே போற்றி குபேரா போற்றி போற்றி

இந்த போற்றியை விரதம்,பூஜை இல்லாத சாதாரண நாட்களிலும் தொடர்ந்து சொல்லி வந்தாலும் மிகவும் சிறப்பான பலன்களை அளிக்க கூடியதாகும்.எனவே குபேரனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து நற்பலன்களை பெறுவோமாக

No comments:

Post a Comment