நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 26 September 2016

பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்


பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்




பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்


நான் ஏழையாயிற்றே! சுவாமி கும்பிட ஐந்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கக்கூட வசதியில்லாத நான், தங்கப்பூவைப் பற்றி சிந்திக்க முடியுமா! அதிலும் ஆயிரம் தங்கப்பூ!'' என்பவர்கள் இதைப்படியுங்க!

சிவபெருமானுக்கு விருப்பமானது வில்வார்ச்சனை. பிரதோஷத்தன்று ஒரு வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும். இந்த வில்வ இலையையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். அநேகமான சிவன் கோயில்களுக்குள் வில்வமரம் இருக்கிறது. அதிலிருந்து உதிரும் இலைகளைக் கழுவி பூஜித்தாலே போதும். முற்பிறவியில் செய்த கொடிய பாவம் கூட வில்வ அர்ச்சனையால் நீங்கும். வில்வமரத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். வில்வார்ச்சனை மூலம் உலகிலுள்ள செல்வம் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதாக பொருள். "நமஸ்தே பில்வதரவே' என்ற மந்திரம் சொல்லி வில்வத்தை பறிப்பதோ, எடுப்பதோ நல்லது. மந்திர சாஸ்திரப்படி, லட்சுமி கணபதி, மகாலட்சுமி யந்திரங்களை வில்வமரப்பலகையில் வரைந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. அதர்வணவேதத்தில் வில்வத்திற்கு 108 சூக்த மந்திரங்கள் உள்ளன. இதனை சிவராத்தியன்று படிப்பார்கள். காளஹஸ்தி புராணத்தில் வில்வத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது. வில்வ இலை

No comments:

Post a Comment