நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 16 September 2016

விஸ்வகர்மா ஜெயந்தி

விஸ்வகர்மா ஜெயந்தி 
17.09.2016 சனி கிழமை விஸ்வகர்மா ஜெயந்தி


















விஸ்வகர்மா 27 லட்சத்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக அவதரித்தார் என்றும், அவரே படைப்பிற்கு மூல காரணமாக அமைந்தார் என்றும் நம்பப்படுகிறது. ஐந்து முகங்களுடனும், முகத்திற்கு மூன்று கண்கள் வீதம் 15 கண்களுடனும், 10 கைகளுடனும் விஸ்வகர்மா காட்சியளிக்கிறார். ஐந்து முகங்களும் பச்சை, மஞ்சள், கறுப்பு, நீலம் என ஐந்து நிறங்களில் காட்சியளிக்கிறார்.மஞ்சள் ஆடையில் மலர் மாலை, ருத்ராட்ச மாலை, புலித்தோல், நாகம் போன்றவற்றை அணிந்து கைகளில் ஜெபமாலை, சூலம், தாமரை, வீணை, டமாரம், அம்பு, சங்கு, சக்கரம் போன்றவற்றை தாங்கி கருணா மூர்த்தியாக அவர் காட்சியளிக்கிறார்.பஞ்ச கோத்திரங்களும், பஞ்ச கோத்திர சிற்பிகளான மனு,மயன், த்வாஸ்டா, சில்பி, விஸ்வக்ஞா ஆகியோர் விஸ்வகர்மாவின் முகத்தில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. தேவர்கள் பயன்படுத்திய புஷ்பக விமானம், வருணன் தண்ணீருக்கு அடியில் அமைத்துள்ள அழகான மாளிகை, ராவணனின் இலங்காபுரி அரண்மனை போன்றவை விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டவை என்று கருதப்படுகிறது.
மேலும் நீர், நெருப்பு, காற்று, பிரம்மன், விஷ்ணு, சிவன், இந்திரர் ஆகிய தேவர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் என்று எதுவுமே இல்லாமல் இருந்த போது ஒளி ஒன்றே பிரகாசித்தது. அந்த ஒளியில் இருந்து "ஓம்' என்ற பிரணவம் தோன்றியது. அந்த பிரணவத்தில் 10 வித நாதங்கள் காணப்பட்டன. அதில் 5 முகங்களில் விஸ்வகர்மா தோன்றினார். சத்யோஜாதம் என்ற முகத்தில் இருந்து மனு பிரம்மாவால் ரிக் வேதமும், வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய மய பிரம்மாவால் யஜூர் வேதமும், அகோர முகத்தில் இருந்து தோன்றிய த்வாஸ்டா பிரம்மாவால் சாம வேதமும், தத் புருஷம் என்ற முகத்தில் தோன்றிய சிற்ப பிரம்மாவால் அதர்வண வேதமும், ஈசான்யம் என்ற முகத்தில் இருந்து தோன்றிய விஸ்வஞ் பிரம்மாவால் பிரணவ வேதமும் தோன்றியதாக நம்பப்படுகிறது. இவர்களின் சந்ததியினரே இரும்பு, மரம், உலோகம், சிற்பம், தங்க வேலைகளை செய்து வருகின்றனர் என்பது நம்பிக்கையாகும், விஸ்வகர்மாவின் அவதார தினத்தை ஆண்டுதோறும் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

No comments:

Post a Comment