நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 30 September 2016

ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்


ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவ சமாதி ஆலயம்





சென்னை பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) யில் உள்ள ஸ்ரீவைதீஸ்வரன் கோவில் அருகே ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றுஅமைந்துள்ளது. அந்த ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு இருதெருக்கள் தாண்டி அமைந்துள்ளது, ஸ்ரீ பைரவ சித்தர் ஜீவசமாதி ஆலயம். எளிமையான தோற்றத்தோடு , ஒருகாம்பவுண்டிற்குள் அமைந்துள்ளது ஆலயம். ஆஞ்சநேயர்ஆலயம் அருகே விசாரித்தால் , வழி கூறுவார்கள்.
 
 வல்லப சக்தியோடுகூடியதான விநாயகர்திருக்கோலம் முதலில்அமைந்துள்ளது.அதனைஅடுத்து அமைந்துள்ளஅறையில் ஸ்ரீ பைரவசித்தரின் ஜீவ சமாதிஅமைந்துள்ளது. மிகவும்சக்திபடைத்ததாகஅமைந்துள்ளது. பைரவஉபாசனைசெய்பவர்கள்அவசியம்தரிசிக்க வேண்டிய இடம் ஆகும்.

No comments:

Post a Comment