நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 3 March 2016

ஹயக்ரீவர் ஒரு கல்வி தெய்வம்- மாணவர்களுக்காக

ஹயக்ரீவர் ஒரு கல்வி தெய்வம்- மாணவர்களுக்காக




கல்வி தெய்வமான ஹயக்ரீவர் , சென்னைக்கு அருகே, செங்கல்பட்டு அருகிலுள்ள செட்டிபுண்ணியம் தேவனாத பெருமாள் கோயிலில் , யோக நிலையில் காட்சி தருகிறார். இவரை மாணவர்கள் தரிசித்தால், நினைவாற்றல் பெருகி, நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு கிடைக்கும்.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு, 1848, கடலூர் அருகிலுள்ள திருவஹீந்திரபுரத்திலிருந்து ஹயக்ரீவர் சிலையை எடுத்து வந்தனர். அந்த சிலையை வைகாசி மக நட்சத்திரத்தில், செட்டிப் புண்ணியத்தில் பிரதிஷ்டை செய்தனர். பின்னர் தாயார் ஹேமாம்புஜவல்லி ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆண்டாள் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. மூலவர் வரதராஜர், உற்சவர் தேவனாத ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றர்.
இங்கு வித்யா-தோஷ நிவர்த்தி சங்கல்ப ஆராதனை என்னும் கல்வி பூஜை நடத்தப்படுகின்றது. தேர்வு சமயத்தில் மாணவர்கள் பேனா, பென்சில்,ஹால்டிக்கெட் ஆகியவற்றை பெருமாளின் பாதத்தில் சமர்ப்பித்து வழிபட , ஞாபகசக்தி அதிகரிக்கும். 10.12-ம் வகுப்பு மாணவர்கள் , மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த வழிபாட்டை அதிகமாக செய்கின்றனர். மாணவர்கள் சார்பில், அவர்களது பெற்றோர்களும் வந்து பிள்ளைகள் பெயரில் அர்ச்சனை செய்யலாம். நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக , பூஜையில் வைக்கப்பட்ட ஹயக்ரீவர் படம் மற்றும் பேனா தபாலில் அனுப்பபடுகிறது. திக்குவாய் உள்ளவர்கள் , பேச முடியாதவர்களுக்கு நாக்கில் தேன் தடவப்படுகின்றது. இதன்மூலம் பேசும் திறன் உண்டாகும். அர்ச்சகரை முன்கூட்டியே தொடர்பு கொண்டு செல்வது நல்லது.
இருப்பிடம்: சென்னை-செங்கல்பட்டு ரோட்டில் சிங்கப் பெருமாள் கோயிலில் இருந்து 3 கிமீ.
திறக்கும் நேரம்: காலை 7.30-12.00; மாலை 4.30-இரவு 8.00
போன்: 8675127999

No comments:

Post a Comment