நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 3 March 2016

குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க avoid cold for newborn babies


குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க avoid cold for newborn babies


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க
avoid cold for newborn babies


தாய் சேய் நலம் காக்க :

குழந்தை பெற்ற தாய்க்கு சளி பிடிக்காமல் இருக்க எளிய வழி முறை .தாய்க்கும் குழந்தைக்கும் நலன் பயக்கும்


சுக்கோ டதிமதுரம் திப்பிலி ஏலத்தூள்
தக்கதிதிப் பைம்புனல்பன் நோய்க்கு .........................குறள்



சுக்கு ,அதிமதுரம் ,திப்பிலி ,ஏலம் இவற்றின் தூளை சம அளவு எடுத்து
கொதிநீரில் இட்டு (இது யைம்புனல் நீர் மருந்தாகும்).

10 கிராம் அளவு -மேற்கண்ட பொடியை நான்கும் சேர்த்தது எடுத்து கொதிநீரில் இட்டு குழந்தைக்குத் தாய் நாளைக்கு 3-5 முறை குடிக்க
குழந்தையின் சளி நீங்கும் '

சளி பிடிக்காமல் இருக்க தாய் இதை அவ்வப்போது அருந்தினால்
சளி குழந்தைக்கு பிடிக்காது .

No comments:

Post a Comment