நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 29 September 2015

ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்



ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்


இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. அவற்றில் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மலர்களால் மாலை சூட்டி வழிபடுவார்கள். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.


உலகில் முதன் முதலில் தோன்றியது இந்த அருகம்புல்தான் என்ற கூற்று உள்ளது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய அனலாசுரன் என்ற அசுரனுடன் விநாயகப்பெருமான் போர் புரிந்தார். அப்போது அனலாசுரனை, தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டார். உள்ளே சென்றதும் அசுரனின் அனல் காரணமாக, விநாயகரால் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் முனிவர்கள், சித்தர்கள் பலரும் பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டி அதனை விநாயகரின் உடல் முழுவதும் வைத்து தடவிவிட்டார்கள். அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அது முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிப்பது வழிபாடாக மாறியது.

No comments:

Post a Comment