நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 25 July 2016

அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு


அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு





குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம்

அரசாங்க வேலைக்கு போகணும்னா அதுக்கு ஜாதகத்துல சூரியன் பலமா இருக்கனும் , அப்படி பலம் இல்லாதவர்கள் முயற்சி செய்யறதாக இருந்தால் சூரியனை வழிபட வேண்டும்

குருநாதர் அருளிய சூரிய வழிபாடு :




ஒவ்வொரு ஞாயிற்று கிழமை
காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்
( 6 am to 7 am ) வீட்டு மாடியில ( மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் )

ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும் .

விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு ,மற்றும் எதாவது ஸ்வீட் நைவேத்தியமாக வைக்க வேண்டும் . (கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்க கூடாது . அதை நாமே சாப்பிட வேண்டும் )

அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்

இந்த வழிபாட்ட செய்ய அதிக பட்சம் 20 நிமிடம் போதும்

இந்த வழிபாட்ட செஞ்ச கண்டிப்பா அரசு வேலை கிடைக்கும்

மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள்

( யார் வேண்டுமானாலும் செய்யலாம் )

1) ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் , நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால் , பகையாக இருந்தால், மறைந்து இருந்தால்

2) அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள் , அதற்க்கு முயற்சி செய்பவர்கள்

3) ஆளுமை திறன் வேண்டுவோர் ( அடிமை படுத்தல் அல்ல )

4) தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் ( யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம் )

5) அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் , அரசு சம்பந்த பட்ட விசயங்களில் இறங்குவோர்

6 ) கண் பார்வை குறைபாடு உடையவர்கள்

அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம் .

No comments:

Post a Comment