நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 30 July 2015

குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிக்க செய்யும் பெளர்ணமி விரதம்


பெளர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. கடவுள் நம்பிக்கை கொண்ட பலரும் பெளர்ணமி விரதம் இருப்பதையும், திருவண்ணாமலை கிரிவலம் செல்வதையும்,

இன்னும் சிலர் தங்கள் ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெளர்ணமி பூஜையில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பெளர்ணமியன்று சிறு குழந்தைகளை விரதம் இருக்க பழக்கினால் மிகவும் சிறப்பாகும். குழந்தைகள் பெளர்ணமி விரதம் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் வளமான வாழ்வை பெறுகிறார்கள்.

தொடர்ந்து அம்பாளை நினைத்து குழந்தைகள் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து சிவன் கோவில் சென்று சிவன், அம்பாள், சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் குழந்தைகளின் ஞானம், நினைவாற்றல் அதிகரித்து அவர்களின் கல்வி சிறக்கும் என்பது உண்மை.

No comments:

Post a Comment