சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்

என் சுவாச காற்றினுள்ளே இருந்து இயக்கி என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளை துணைக்கொண்டு சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அவர்களைப் பற்றிய படிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
வாத்தியார் ஐயா என்று அன்புடன் மக்களால் அழைக்கப்படும் சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோவில் சிங்கம்புணரியில் அமைந்துள்ளது.

என் சுவாச காற்றினுள்ளே இருந்து இயக்கி என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளை துணைக்கொண்டு சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அவர்களைப் பற்றிய படிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
வாத்தியார் ஐயா என்று அன்புடன் மக்களால் அழைக்கப்படும் சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோவில் சிங்கம்புணரியில் அமைந்துள்ளது.
இதற்கு மதுரை, புதுக்கோட்டை, பொன்னமராவதியில் இருந்து பஸ்வசதிகள் உள்ளது.எல்லா சித்தர்கள் சமாதியிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு இருக்கும். இந்த விசயம் மிகவும் வித்தியாசமான ஒன்று ஆகும். சுவாமிகள் சமாதி அடைவதற்கு 12 வருடத்திற்கு முன்பே சுடுகாட்டில் காட்டுப்பகுதியில் தன்னுடைய உருவத்தைப் போன்று உருவச்சிலையை சிற்பியைக் கொண்டு வடிவமைத்து அதனை சேர்த்து அணைத்து தினசரி தியானம் செய்து தன்னுடைய தவசக்தியை அந்த சிலைக்கு மாற்றியமைத்துக் கொண்டார். அந்த சிலைதான் சுவாமியின் சமாதியில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 3 பௌர்ணமி பூஜைக்கு சென்று வழிபாடு செய்தால் சுவாமியின் அருள் பார்வை கட்டாயம் நமக்கு கிடைக்கும்.சுவாமியின் பௌர்ணமி பூஜையில் விடாது சென்று வழிபாடு செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட கோர்ட், கேஸ் வழக்கிலும் வெற்றி தேடிவரும். பூர்வீக சொத்துக்களின் பிரச்சனைகள் தீர்வு ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழிலில் விருத்தியும், லாபமும் உண்டாகும். செவ்வாய் திசையில் ஏற்படும், கெடுபலன்களுக்கு செவ்வாய் கிழமை எலுமிச்சை லைமாயை சுவாமிக்கு சாற்ற் அதனை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிட பாதிப்புகள் நீங்கும். ஓரிஜினல் பசும் சாணம் விபூதியைக் கொண்டு சுவாமியின் திருமேனியில் அபிஷேகம் செய்து பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டால் சீர்பிடித்த குழந்தைகளுக்கு பொட்டு நோயை நீக்கலாம். தினசரி சிறிதளவு பஞ்சகவ்வியத்தில் கலந்து சாப்பிட்டுவர எப்படிப்பட்ட சரும வியாதியும் நீங்கும். படிப்படியாக நோயின் பாதிப்புக் குறையும். ஆனால் கட்டாயம் சைவ உணவு பாதுகாப்பு சாப்பிட வேண்டும். சிறிதளவு பன்னீரில் கலந்து நெற்றியில் வாத்தியார் ஐயா என்று திலகம் நெற்றியில் வைக்க துஷ்ட ஆவிகள் ஓடி ஒளியும். சுவாமியின் திருஉருவப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தாலே தேவையற்ற முனி ஓட்டங்களும் விலகிச் செல்லும்
No comments:
Post a Comment