நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 16 October 2017

திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால் வழங்கப்படும்

திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால்
வழங்கப்படும்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்
கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்
20.10.2017 ஐப்பசி3 மாத வெள்ளி கிழமை சூடான பசும் பால்
21.10.2017 ஐப்பசி 4 மாத சனி கிழமை சூடான பசும் பால்
22.10.2017 ஐப்பசி 5 மாத ஞாயிற்று கிழமை சூடான பசும் பால்
23.10.2017 ஐப்பசி6 மாத திங்கள் கிழமை சூடான பசும் பால்
24.10.2017 ஐப்பசி 19 மாத செவ்வாய் கிழமை சூடான பசும் பால்
தினமும் மாலை 5 மணிக்கு மேல் வழங்கபடுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ திருசெந்தூர் முருகன் ,ஸ்ரீ வள்ளி ,ஸ்ரீதெய்வானை திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

No comments:

Post a Comment