நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 26 October 2016

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்




சில வீடுகளில் மறைந்த முன்னோர்களான பிதுர்கள் வருவதாக ஒரு ஐதீகம். நரகத்தில் இடப்பட்டவர்கள் விடுதலை பெற்று வீடுகளுக்கு வருவதாக நம்பி உணவு படைப்பார்கள். இதனால் இத்திருநாளுக்கு நரக சதுர்த்தி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அசைவம் வேண்டாம் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி பாவச் செயல்களை விடுத்து தர்மசிந்தனையோடு விளங்க தீபாவளி அன்று ஆலயம் சென்று வழிபடுவதும் நல்லது. ஆனால் பலர் தீபாவளியை தவறான முறையில் கொண்டாடி தீபாவளியின் தெய்வத் தன்மையை கெடுத்து விடுகின்றனர்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறி மது அருந்தி மாமிசம் உண்டு மகிழ்வதாக கூறி தாங்களே நரகாசுரர்களாக மாறிவிடுவது கவலைக்குரிய ஒன்றாகும். புனிதமான தீபாவளி திருநாளில் தீய பழக்கங்களை கைவிட்டு தூய உணவை சாப்பிட்டு களித்திருக்க வேண்டும்.

மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல், பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல், அசுர குண இயல்புகளாகும். கடவுளை மறந்து வாழ்பவர்கள் பலவித துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டவே நரகாசுரன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வேண்டும்

No comments:

Post a Comment