நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 19 October 2016

குடும்ப பிரச்சனை, வீட்டில் வறுமை, தொழிலில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் கைகொடுக்கும்.

குடும்ப பிரச்சனை, வீட்டில் வறுமை, தொழிலில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் கைகொடுக்கும்.




திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு சிறிது தொலைவில் உள்ள தென்னாங்கூரில் ஞாயிறு தினத்தன்று ருக்குமாயி - பாண்டு ரங்கனை, தொடர்ந்தார் போல் மூன்று வாரம் தரிசிக்க வேண்டும்! இராஜ அலங்காரத்துடன் கண்கொள்ளா அழகு கொண்ட எம்பெருமானை தரிசிக்கலாம்!

திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையில் நாட்ரம்பள்ளி அருகில் மெயின் ரோட்டில் உள்ள புற்றுக்கோயில் ஆலயம்! புற்றிற்கு மஞ்சள் குங்குமம் செலுத்தி, அர்ச்சனை செய்து ஒன்பது நெய் தீபமேற்றி வணங்க வேண்டும். பரிகார முறைப்படி, இருபது நிமிடம் அமர்ந்து இருபத்தோராம் நிமிடம் கோயிலிலிருந்து வந்துவிட வேண்டும்.

திருவாரூர் சிவாலயம்.




வேதாரண்யம் - சிவாலயம்

சிக்கல் - சிங்கார வேலர் ஆலயம்.

எண்கண் - முருகர் ஆலயம்.

ஆகிய ஆலயங்கள் குடும்பப் பிரச்சனை, சிக்கல், வறுமைத் தீர்க்கும் பாவங்களை நீக்கும் அதிமுக்கியமான திருத்தலங்களாகும்.

No comments:

Post a Comment