நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 27 November 2017

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஐந்தாம் ஆண்டு குருபூஜை


கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஐந்தாம் ஆண்டு குருபூஜை




.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


ஹேவிளம்பி வருடம் கார்த்திகை 14 மாதம் 30-11-2017 வியாழக்கிழமை ரேவதி நட்சத்திர தினத்தன்று
காலை 8.15 மணிக்கு மேல்--அனுக்னஞ,விக்னேஷ்வர பூஜை
கணபதி ஹோமம்
நவகிரக ஹோமம்
ஏகாதச ஸ்தாபன அபிசேகம்
பகல் 11.00 மணிக்கு ----குரு பூஜை ,மகேஷ்வர பூஜை,
பகல் 1.00 மணிக்கு--------------தமிழ் இசை கச்சேரி , திருவாசகம் முற்றொதல்


மாலை 6.00மணிக்கு
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் திருமேனி திரு உருவம் திருவீதி உலா சித்தரின் இல்லத்தில்புறப்பாடு கரூர் டவுன்
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
நான்காம் ஆண்டு குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
ஆசிர்வாதம் மற்றும் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
பஸ் ஸ்டாப்
கரூர் --வெள்ளகோவில் வழியில்
ரூட் பஸ்ஸ்டாப் ----பவுத்திரம்
டவுன் பஸ்ஸ்டாப் --டிவிஎஸ் ஸ்டாப்
9944460066-9443228716

No comments:

Post a Comment