நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 5 July 2017

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 513ம் ஆண் டு தேரோட்டம்

நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 513ம் ஆண் டு தேரோட்டம்


















நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா 513ம் ஆண் டு தேரோட்டம்  07.07.2017 ( வெள்ளி கிழமை) நடக்கிறது. இதையொட்டி நெல்லை நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது.

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், சப்பர வீதி உலாக்களும், கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன.

8-ம் திருவிழாவான இன்று காலை 7 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தியும், பின்னர் பச்சை சாத்தியும் உலா நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா நடக்கிறது.

இரவு 10 மணிக்கு சுவாமி தங்க கைலாச பருவத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் வீதி உலா சென்று தேர்களை பார்வையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது

நெல்லையப்பர் சுவாமி தேர், தமிழ்நாட்டிலேயே 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேர் 28 அடி நீளமும், 28 அடி அகலமும், 450 டன் எடையும் கொண்டதாகும். கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகளுக்கென 5 தேர்கள் உள்ளன.

ஆனிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை 07.07.2017(வெள்ளி கிழமை ) நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள்கிறார்கள். காலை 8.06 மணிக்கு முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள். தேரோட்டத்தையொட்டி 5 தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. முதலில் விநாயகர் தேர், 2-வதாக சுப்பிரமணியர் தேர்,
3-வது சுவாமி நெல்லையப்பர் தேர், அதன் பின்பு காந்திமதி அம்பாள் தேர் இழுக்கப்படும். இந்த தேர்களுக்கு பின்னால் சண்டிகேசுவரர் தேர் 
இழுக்கப்படும்

No comments:

Post a Comment