நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 8 March 2017

ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள்

ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள்

அன்பு மாறா இல்லறமும்
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தாரா உறவுகளும்
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும்
ஊக்கம் அளிக்கும் நட்பும்
என்றும் மாறா நற்குணமும்
ஏவல் கேட்கும் பணிவும்
ஒற்றுமை நீங்கா இயக்கமும்
ஓம் கார பெருமையும்
பிறப்பு அறுக்கும் ^ஒளஷதமும்
ஒன்று சேர தந்து அருள்வாய்
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்

ஞானத்தின் முதற் படிகள்....
1.உண்மை மறவாமல் இருத்தல்...
2.நற்சிந்தனையை வளர்த்தல்...
3.நான் என்ற மமதை அகற்றுதல்..
4.பிறர் குறை காண்பதை விட தன் குறையை நிவர்த்தி செய்தல்...
5.பிறர் மனதை துன்புறுத்தாமல் இருத்தல்....
6.தன்னை நோக்கு எது வந்ததோ அதை மனதார ஏற்றல்...
7.சான்றோன் சபையில் அமைதி காத்தல்.....
8.முகத்தில் என்றும் மகிழ்ச்சி பொலிவுடன் இருத்தல்...
9.நிகழ்காலத்திலே வாழ்தல்....
10.எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் கொண்டு வாழும் வரை உத்தமன் என்று மற்றவர் மனதில் இடம் பிடித்தல்...
இவை கொண்டு நடைமுறைக்கு வந்தால் ஞானம் உங்கள் எண்ணத்தில் குடி புகும்

No comments:

Post a Comment