நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 14 October 2015

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா 









தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நவராத்திரி விழாதான், தசராவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா 13.10.2015(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.


முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை கடைபிடிக்க தொடங்கினர். மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவையெட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.


தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு துர்க்கை திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது.


2–ம் திருநாள் இரவில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலாவும், 3-ம் நாள் இரவில் பார்வதி திருக்கோலத்திலும், 4ம் திருநாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் திருநாளில் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் திருநாளில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் திருநாளில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் திருநாளில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் திருநாள் இரவில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.10-ம் திருநாளான வருகிற 22ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளுகிறார். அப்போது, சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.


பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா வின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. 

No comments:

Post a Comment